*படிமறப்பர், *நடைமறப்பர், தெருவிற் செல்லும் பாவையரை வழிமறைப்பர், கூத்த டிப்பர்; குடிகெடுக்கும் காளைகளைக் காணும் போது குமுறிமிகத் துடிதுடிக்கும் எனது நெஞ்சம் எதிர்காலம் இவர்கையில் என்று நம்பி இருக்கின்றார் நிகழ்காலப் பெரியோர்; ஆனால் உதிர்காலம் போலன்றோ இளைஞர் வாழ்க்கை உருள்கிறது; தளிர்காலம் வருமா என்னும் புதிர்கோலம் இடுவதனால் எனது நெஞ்சம், பொழிபனியின் குளிர்கால நடுக்கம் போல விதிர்விதிர்க்கும்; துடிதுடிக்கும் அவர்தம் நெஞ்சில் விடிகாலம் அரும்பிவரும் காலம் என்றோ? புதியஅலை எனும்வலையை வீசி விட்டால் பொருள்பெருகும் புகழ்வளரும் என்று நம்பி மதிதவறி எழுத்தாளர் வீழ்ந்து விட்டார்; மனமயக்கம் தருகின்ற காமச் சாற்றைப் புதுமுறையிற் பிழிந்தெடுத்து வார்த்து வைத்துப் புத்தகங்கள் பத்திரிகை எழுதி விட்டார்; கதையிதுவா?கலையிதுவா? இளைய நெஞ்சம் கருகிவிடும் வழியன்றோ எனத்து டித்தேன் நல்லறிவைப் பண்பாட்டை ஒழுக்கந் தன்னை நாகரிகக் கலைவளத்தை விஞ்ஞா னத்தைச் சொல்லுதற்குப் படைப்பாற்றல் கொண்டோன் கையில் சுழல்கின்ற கோலொன்றே எழுது கோலாம்; புல்லறிவால் பொருள்பெருக்கல் ஒன்றே நோக்கிப் புழுத்ததெலாம் வரையுங்கோல் கன்னக் கோலாம்; நல்லறிவைக் கெடுத்துமிகப் பொருள்ப றிக்க நன்மைக்கே தீவைக்கும் நெருப்புக் கோலாம் |