16 சிவப்பு விளக்கு ஒன்றிரண்டு பெற்றிருந்தால் மகிழ்ச்சி பொங்கும் உள்ளமெலாம் அன்பூறும்; கண்ணே முத்தே என்றிருந்து கொஞ்சிமகிழ்ந் தின்பங் காண்போம்; எட்டென்றும் பத்தென்றும் பெருக்கி விட்டால் கன்றிமனம் நோவதலால் இன்பம் ஏது? கனிவேது? குலவிவரும் அன்பும் ஏது? முன்றில்தனில் வரும்போதே எரிந்து வீழ்வோம், முப்பொழுதுங் கடுகடுப்பே முகத்தில் வாழும். தந்தைக்கும் நலனில்லை; சுமந்து பெற்ற தாய்தனக்கும் நலனில்லை; பெருகு மக்கள் மந்தைக்கும் நலனில்லை; வீடும் நாடும் வளஞ்சிறக்க வழியில்லை; இவற்றை எல்லாம் சிந்திக்கும் மனமில்லை; சொன்னால் கேட்கும் செவியில்லை; இவ்வாறே நடந்தால் நம்மை நிந்திக்கும் வருங்காலம்; இல்லை என்ற நெடுஞ்சொல்லே எத்திக்கும் நிறைந்தி ருக்கும்; முக்கோண வடிவத்தைக் காணும் போது முகங்கோணுஞ் சிலருக்கு; நாட்டு மக்கள் எக்கேடு கெட்டாலும் தம்மி னத்தார் இனிதாக வாழ்வதுதான்அவர்தங் கொள்கை; |