சிந்தனையே இல்லாமல் எட்டும் பத்தும் சீரழிய மகப்பெறுதல் வீட்டிற் குள்ளே வந்துபுகும் வறுமைக்கோர் அறிவிப் பாகும்; வளமிழந்து நலமிழந்து நாடு தானே நொந்தழியுஞ் சிறுமைக்கோர் அறிவிப் பாகும்; நுண்மதியர் ஈதுணர்ந்தே வீடும் நாளும் வெந்துயரில் வீழாமற் காப்ப தற்கு விளக்குகின்றார் முக்கோணச் சின்னங் காட்டி. என்றுரைத்தேன் மொழிந்தவெலாங் கேட்ட நல்லாள் ‘எழில்கொழிக்கும் நமதில்லம்; நலங்கள் பெற்று நின்றினிக்கும் நம்நாடு; நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் இவ்வெண்ணம்; அதனால் நீங்கள் நன்றுரைக்கும் படிநடப்பேன்; கட்டுப் பாட்டு நலங்காக்கும் பொறுப்புமக்கும் வேண்டு மத்தான்! என்றனுக்கு மட்டுமிது கடனாம் என்றே ஏமாந்து போகாதீர்’ என்று ரைத்தாள். |