140 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
கவலைக்கு மருந்தாகும் பிள்ளை; ஆனால் கணக்கின்றிப் பிறந்துவிடின் அதுவே உள்ளக் கவலைக்கு விருந்தாகிச் சலிப்பை ஊட்டும்; காப்பதற்கு வழியின்றித் தவிக்கச் செய்யும்; உவமைக்கு விளகென்று சொல்வ ரேனும் ஒருவர்க்குப் பலமகவு பிறந்து விட்டால் அவலத்தைக் காண்பதலால் ஒளியா தோன்றும்? அவர்அகத்தில் களிப்பேது? சிரிப்பும் ஏது? கதிரவனும் நிலாமகளுங் கூடிப் பெற்ற கணக்கில்லாப் பிள்ளைகள்தாம் விண்மீன் கூட்டம்; அதிகஒளி அக்கூட்டம் பெற்ற துண்டோ? அங்கங்கே மின்மினிபோல் ஒளிரக் கண்டோம்; புதியவழி பின்பற்றித் திட்ட மிட்டுப் புகுகின்ற மனமின்றிப் பெருக்கி விட்டால் மதிமயங்கி ஒளிகுறைந்து துயரந் தோய்ந்து வழியறியா இருட்டறையாய்ப் போகும் வீடு. |