148 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
தோண்டுங்காற் பொன்தருவாள் சோர்வ கற்றித் துளைத்தெடுத்தால் தந்திடுவாள் எண்ணெய்; மேலும் வேண்டுங்கால் நிலக்கரியும் ஈவாள்; ஆழ வெட்டுங்கால் புனல்தருவாள்; ஆழ்ந்த கழ்ந்து கீண்டுங்கால் இரும்புமுதற் கனிக ளெல்லாம் கிடைக்கஅருள் நல்கிடுவாள்; ஏர்மு கத்தால் தீண்டுஞ்சால் வழியெல்லாம் பயிர்கள் காட்டிச் செழித்திருப்பாள் வளமெல்லாம் கொழித்தி ருப்பாள் கனிதருவாள் காய்தருவாள் வாழும் வண்ணம் காலமெலாம் உயிர்தருவாள்; உடல்வ ருத்தி இனிதருளும் ஈகையினால் அவளை *வள்ளி எனுஞ்சொல்லாற் புகழ்ந்துரைக்க ஆசை தோன்றும் நனிமுயன்றே பாடுபடின் பொருளை வாரி நல்கிடுவாள்; உழைப்பின்றி அயர்ந்து நின்றால் முனிவுகொடு பொருள்குறைப்பாள்; உழைப்ப றிந்து; முதல்கொடுக்கும் முதலாளி என்றுஞ் சொல்வேன்; நமக்கென்றே இருப்பவளை வாழ்நா ளெல்லாம் நலிவுறுத்தி வருகின்றோம்; தலையி டத்துச் சுமக்கவென மரம்வைத்தோம் மனைகள் கட்டத் தூண்வைத்தோம் கல்வைத்தோம் காலும் வைத்தோம் எமக்கென்ன என்றவள்மேல் உமிழு கின்றோம் இரும்பெடுத்தே அவளுடலை அகழு கின்றோம் சுமக்கின்றாள் பொறுக்கின்றாள் பொறுமை சாலி தொழிலாளி போலிருக்குந் திறமை சாலி.
* வள்ளி - வள்ளன்மையுடையவள் |