பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்151

மாறி நடப்பார் மனைவி கணவனெனும்
பேரைக் கடப்பார் பெருமைமிகும் இல்லறத்தின்
சீரை ஒருசிறிதும் சிந்தித்துத் தாம்நடவார்;
காட்சிக் குடும்பமெனக் கட்டுரைப்ப தன்றிஇது
மாட்சிக் குடும்பமெனும் *மாற்றஞ் சொலப்படுமோ?
மாலை முடித்த மணவாளன் தான்கொண்ட
வேலை முடித்துப்பின் வீடு திரும்புங்கால்
மாலை யடுத்திருக்கும் மங்கிருளும் சூழ்ந்திருக்கும்
சீலை யுடுத்திருக்குஞ் சேயிழையாள் மட்டுமிராள்;
மெய்சோர்ந்து கைசோர்ந்து மேலும் மனஞ்சோர்ந்து
சோர்ந்து வந்தானைப் பார்த்து வரவேற்க,
உண்ணுஞ் சுவைநீர் உவந்து கொணர்ந்துதர.
எண்ணங் களிக்க, இனிய மொழிசொல்ல,
இல்லாள் மனையகத்தே இல்லா நிலைகண்டு
நல்லான் அருகிருந்த நாற்காலி மேலமர்ந்தான்;
தொங்குசிறு பையொன்று தொங்குகிற கையுடையாள்
தங்குமொரு சிற்றுடையுந் தாங்காத மெய்யுடையாள்
வெள்ளைப் பொடியால் விளங்கும் முகமுடையாள்
அள்ளிச் சுருட்டி அமைத்த குழலுடையாள்
ஆடி அசைந்தே அழகுமயில் போல்வருவாள்;
வாடி அமர்ந்திருப்போன், வந்தாள் முகம்நோக்கி,
“எங்குநீ சென்றிருந்தாய்? இந்நேரம் ஆனபினும்
தங்கி வருவதுமேன் தையால்” எனக்கேட்டால்
“மாதர்கழ கத்தில் மனைவிமார் தங்கடமை
ஓதுதற்குச் சென்றிருந்தேன் ஊர்மெச்சப் பேசிவந்தேன்;
கற்பென்றா லென்ன? கணவன் உரிமைஎன்ன?


*மாற்றம் - சொல்.