வையத்துள் வாழ்வாங்கு வாழாத ஓர்குடும்பம் நையப் புடைக்கும் நரகம் எனவாகும்; எங்கோ நரகொன் றிருக்கின்ற தென்றுரைப்பார் இங்கேதான் அந்த இடர்நரகுங் காண்பதுண்(டு) இல்லாள் மனைமாட்சி இல்லாளேல் அவ்வாழ்க்கை பொல்லா நரகாகும் பொன்றாத் துயராகும்; பேரின்ப வீடெனவும் *பீழை யுறுநரக ஊருண் டெனவும் உரைத்திடுவர் கண்டதிலை; ஆனாலும் நம்மருகில் அவ்விரண்டும் உண்டென்று காணா தலைகின்றோம் கண்ணிருந்துங் காணுகிலோம்! போலித் தனமெல்லாம் போற்றித் திரியாமல் வேலிக்குள் நின்றே விளைபயனைத் துய்த்திடுவோம் அன்பே துணையாக ஆற்றுங் குடும்பத்தில் இன்பம் நிலைக்கும் இனிது
பீழை - குற்றம், துன்பம். - மன்னர் கல்லூரி சிகங்கை 29.1.1972 |