பக்கம் எண் :

154கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

24
சமுதாய வீதியிலே

எண்சீர் விருத்தம்

சாதிமதம் வேர்விட்டுக், கூடி நின்ற
      சமுதாயம் சீர்கெட்டுப், பிளவு பட்டு,
மோதிவரும் பகையுற்றுத் தாழ்வும் உற்று
      முன்னேறும் நெறிகெட்டு, மிடியும் பட்டு,
*மேதியினும் கீழாகி, உணர்வு கெட்டு,
      மேலான மதிகெட்டு, மானம் விட்டு,
மேதினியில் அடிமைஎன உரிமை கெட்டு,
      மெய்சுமந்து மாந்தரென வாழ்ந்து வந்தோம்.

**மண்சுமந்த தோள்களிலே வீரங் கொண்ட
      மாமன்னர் வழிவந்தோர், சங்கம் ஏறிப்
பண்சுமந்த பாடலினால் உலகை யாண்ட
      பாமன்னர் வழிவந்தோர், தமிழ மாந்தர்;
கண்சுமந்து வந்தாலும் பார்வை கெட்டுக்
      காலிடறி வீழ்ந்தனரே என்று நெஞ்சில்
புண்சுமந்து நொந்தெழுந்து புரட்சி செய்யப்
      பொங்கிஎழுந் தரியேற்றைப் போல வந்தார்,


*மேதி - எருமை **மண்சுமந்த - நிலத்தை ஆண்ட