26 வாழ்வுப் பாதையில் - பக்தி ‘ஆண்டவனே எனைக்காக்க உன்னை யன்றி ஆருள்ளார் இவ்வுலகில்? வேண்டி நிற்போர் வேண்டுவதை வேண்டியவா றளித்துக் காத்து வினைதீர்க்க வல்லவனே! கருணை நெஞ்சம் பூண்டவனே! பொன்பொருள்கள் போகம் ஈவோய்! புத்தாண்டுப் பிறப்புக்குப் பரிசுச் சீட்டு வேண்டியவை வாங்கியுளேன்; மற்ற வர்க்கு வீழாமல் தடுத்ததனைக் காப்பா யப்பா!’ ‘பரிசென்றால் ஒன்றிரண்டா? பத்து லட்சம்! பகவானே உனைநம்பி வாங்கி யுள்ளேன் அரசென்றால் ஈதன்றோ அரசு! நல்ல ஆண்டவனும் நீயன்றோ? பத்து லட்சம் பரிசொன்றும் எனக்குவரச் செய்து விட்டால் பாரிலுனை எந்நாளும் மறக்க மாட்டேன்; வரிசையுடன் வெள்ளிவிளக் கொன்று வாங்கி வைத்திடுவேன் சந்நிதியில்; அருள்வா யப்பா!’ ஆண்டவன்முன் இவ்வண்ணம் வேண்டி நிற்கும் அடியர்பலர் கோவிலுக்கு வந்து செல்வர்; ஈண்டவர்தம் செயலெல்லாம் பக்தி என்றால் இனியுலகம் ஏற்காது வெறுத்துத் தள்ளும்; வேண்டுகிற பரிசிலது மற்ற வர்க்கு விழவேண்டா என்னுந்தன் னலமா பக்தி? காண்டகுநல் லின்பமெலாம் வையம் பெற்றுக் களித்திடுக என்பதன்றோ பக்தி யாகும் |