பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்165

27
இன்றைய மனிதன்

பூவுலகங் கண்மலரப் பொங்குங் களிசிறக்கப்
*பாவுங் கதிர்பரப்பிப் பைய வருங்கதிரோன்
நட்ட நடுவானில் நண்ணிவெயில் விட்டெரிக்கும்
பட்டப் பகலில் பலபேர் நடமாடும்
வெட்ட வெளியில் விரிந்த நடுத்தெருவில்
**முட்ட நரைத்த முதுமைப் பெருங்கிழவர்
தாங்கும் இடக்கையில் தண்டூன்றித் தந்தலைமேல்
ஓங்கும் வலக்கையில் ஓர்விளக்கை ஏந்திநின்று
முன்னே வருவோர் முகமெல்லாம் பார்த்தலுத்துப்
பின்னேயுந் தேடிஅவர் பேதலித்து நின்றிருந்தார்;
ஆண்டு வருவோர்தாம் அக்கிழவர் பாலணுகி
‘ஈண்டெதனைத் தேடி இளைத்தீரோ’ என்றார்க்குத்
‘தேடுகிறேன் மாந்தனைத்தான் தேடி அலைந்தலைந்து
வாடுகிறேன்’ என்றுரைத்தார்; ‘வெய்ய பகல்தனிலோ
கையில் விளக்கெடுத்துக் காணப் புறப்பட்டீர்?
வெய்யில் கொடுமை விளைத்த புதுமையிதோ?
ஒன்றும் புரியவில்லை உம்செயலே விந்தையதாம்’
என்று பலசொல்லி எள்ளி நகைத்தார்கள்;
‘எள்ளி நகைப்போரே இவ்வண்ணந் தேடினுமே


*பாவும் கதிர் - பரவிய ஒளியை, **முட்ட - நிறைய