166 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
உள்ளும் மனிதனைநான் ஒரிடத்துங் காண்கிலனே’ என்று விடையிறுத்தார் எல்லாந் தெரிகிழவர்; ஒன்றுங் கதையிதனுள் உண்மைப் பொருளென்ன? கட்டுடலுங் கைகாலும் கண்ணும் பிறவுறுப்பும் மட்டும் உடையானை மாந்தன் எனப்புகலார்; ஒப்பிலா நல்மனமாம் ஒருறுப்புக் கொண்டவனே இப்புவியில் வாழ்மனிதன் என்றுரைக்கத் தக்கவனாம்; பட்டுடையும் வானுயர்ந்த கட்டமும் எக்காலும் தட்டறியாச் செல்வமுடன் மற்றுமுள எப்பொருளும் பெற்றவனை நாகரிகம் பெற்ற மனிதனெனச் சொற்றவரைக் கண்டதில்லை; துய்ய அகத்துறுப்பா அன்புமுதற் பண்புகட் காளாகி நின்றானே மன்பதையுள் போற்றும் மனிதன் எனப்படுவான்; பண்புமனம் அற்றவரே பார்முழுதும் ஈண்டிவிட்டார் பண்புமனம் கொண்டவரைப் பார்த்தல் அரிதாகும் என்னுங் கருத்தை எடுத்து விளக்குவதே முன்னங் கதையின் முழுமைப் பொருளாகும்; தென்னாட்டு முன்னோர் திணையிரண்டு சொல்லிவைத்த பண்பாட்டை எண்ணிப் பகுத்துணர நாம்மறந்தோம், மக்கள் உயர்திணையாம்; மாண்பார் உயர்ஒழுக்கம் மிக்கமையால் அத்தகுநல் மேன்மைநிலை பெற்றார்கள், தேன்தமிழில் அந்தத் திணையென்னுஞ் சொல்லுக்குள் ஆன்ற பொருள்ஒழுக்கம்; அவ்வொழுக்கம் இல்லாரேல் மக்கள் நெடிலாகி மாக்கள் எனவாகித் தக்க நிலையின்றித் தாழ்ந்த திணையாவர்; மக்கள் வடிவொன்றால் வாய்க்கா துயர்திணைதான் மக்கள் இயல்பதுதான் மாண்பார் உயர்திணையாம் என்னுங் கருத்தை இலக்காக்கி வாழ்ந்தோமா? |