168 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
பண்ணா தனவெல்லாம் பண்ணி மகிழ்கின்றோம்; வாழ்வின் நலமெல்லாம் வாய்க்க முயன்றிடுவோம் தாழ்வு வருமேல் தரியோம் அதுமுறைதான்; ஆயினுமவ் வாழ்க்கை அயலவர்க்கும் வேண்டுமன்றோ? தீயனவே செய்ததனைத் தீய்த்துக் கரியாக்கி மாய்ப்பதுதான் நல்லதொரு வாழ்வாமோ?அன்னவரை ஏய்த்துப் பிழைப்பதுதான் ஈங்கினிய வாழ்வாமோ? மாண்புயர்ந்த காதல் மலரைவிட மெல்லிதெனக் காண்பதுதான் நம்முன்னோர் கண்டுரைத்த நல்வழியாம்; இல்லறத்து வாழ்வில் ஒருவன் ஒருத்திஎன்ற நல்லறத்தைச் சொல்லி நடந்தவரும் நம்முன்னோர்; நாகரிகப் பேரால் நலமறியாப் பாழுக்கு வேகமுடன் ஏகுகிறோம்; வீணை நரம்பதனை மெல்ல வருடாமல் வேல்கொண்டு சாடுகிறோம்; நல்லதொரு பூவை நசுக்கிக் கசக்கிவிட்டுச் சொல்லரிய தேன்சுவைக்கச் சூழுகிறோம் அந்தந்தோ! இல்லறத்தில் வாழும் இருவர் பெறுமின்பம் ஈங்குத் தனியுடைமை; இவ்வரிய செம்மைநெறி நீங்கிப் பொதுவுடைமை யாக்க நினைக்கின்றோம் இன்பம் பெறவே இழிசெயல்கள் அத்துணையும் வன்பிற் புரிந்திங்கு வாழ்கின்றோம்; நாம்மனிதர்! நட்பைப்போல் நற்பண்பு நானிலத்துக் கண்டதிலை அப்பப்பா அவ்விடத்தும் ஆற்றுகிறோம் வஞ்சகங்கள்; நம்மைத் தெளிந்திருக்கும் நண்பர்க்குந் தீமைசெயல் செம்மை நெறிஎன்றே செய்து வருகின்றோம்; எள்ளுங் கயமை எவையுளவோ அவ்வெல்லாம் உள்ளம் உவந்தே உயர்வாக ஆற்றும்நமை மக்களே போல்வரென வைத்திருக்கும் இவ்வுலகம் |