மக்களெனப் போற்றி மதித்து வழங்காது; நாட்டில் பொதுத்துறைகள் நல்ல பணித்துறைகள் வேட்டம் புரியிடம்போல் தேட்டை யடிக்கின்றோம்; நீதி யுரைக்கும் நெடுமன்றில் பேரறத்தை மீதி யிருக்கத்தான் விட்டோமா? நம்மாட்சி! ஆண்டவன் கோவிலுக்குள் ஐயஓ! நாம்புகுந்து வேண்டா வினையெல்லாம் செய்யாமல் விட்டோமா? செய்யாத தீமையிலை செய்யா இடமில்லை நையாமல் நைந்துமனம் நாளும் உருகுகிறேன்; நீதிகெடும் மாந்தர்தமை நெஞ்சம் நினைந்துவிடின் வேதனைகள் கொஞ்சமல்ல வெந்துழன்று வாடுகிறேன்; பண்புடையார்ப் பட்டுண் டுலகம் எனவுரைத்த பண்புணர்ந் தாற்றுவமேல் பாரில் உயர்ந்திடுவோம்; ஆதலினால் பண்புயர்க அன்புயர்க என்றுசில ஓதி முடித்தேன் உவந்து. |