பக்கம் எண் :

170கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

28
வெம்புவான் கம்பன்

கலிவெண்பா

செந்நெல்லும் பைங்கரும்புஞ் சேர்த்து விளைவித்துப்
பொன்கொழிக்கச் செய்தமையாற் பொன்னியெனும் பேர்கொண்டாள்;
காணும் இடமெல்லாங் காவிரித்துச் செல்லுதலால்
பேணுமொரு காவிரியாம் பேர்பூண்டாள்; நாளெல்லாம்
வற்றா வளஞ்சுரந்து வாழ்வளித்துக் காப்பதிலே
பெற்றாள் எனவுரைக்கப் பெற்றாளவ் வாரணங்(கு)
உச்சி முடியிருந் தோடிவருங் கங்கையினும்
மெச்சும் புனிதத்தால் மேம்பாடு கொண்டவளின்
*கால்பட்ட மண்ணெல்லாம் **கஞ்சமுறு செல்வமகள்
கால்பட்டுப் பூத்துக் களிநடனஞ் செய்ந்நாடு
சால்பட்ட செய்யெல்லாஞ் ***சாலி தலைசாய்த்து
வேல்தொட்ட கண்மடவார் வெட்குதல்போற் காட்சிதரும்
வந்தார் பசிநீக்கி வாட்டந் தவிர்க்கின்ற
நந்தா வளநாடு நன்செய்ப் பெருநாடு;
நாற்று வளத்தாலே நானிலம் போற்றும்வணம்
சோற்று வளம்படைத்த சோணாட்டுப் பேரூரில்
பாட்டரசன் தான்பிறந்தான் பன்னும் புகழ்ச்சோழ


கால்பட்ட - வாய்க்கால் சென்ற, ** கஞ்சம் - தாமரை, ***சாலி -நெற்பயிர்