பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்173

தட்டுதற்கும் ஆளில்லை என்ற தருக்காலோ
பாட்டுலகைப் பாழ்படுத்திப் பாடித் திரிகின்றார்?
கேட்டைக் களையக் கிளர்ந்தெழுவார் இல்லைஎனில்
பாட்டுந் தமிழும் பரவும் இலக்கியமுங்
கேட்டுக் கிலக்காகிக் கீழ்நிலையிற் போய்வீழும்;
வீழுநிலை வந்து விடுமோ எனமயங்கிச்
சூழும் புகழ்க்கம்பன் துன்பத்தால் வெம்பிடுவான்;
அண்டை மொழிகள் அருமைத் தமிழ்மொழிக்குள்
ஒண்டஇடம் தந்தால் ஒலிக்கும் மரபறிந்து
சொல்லும் முறைதெரிந்து சொல்லினான் நம்கம்பன்;
புல்லுங் கவிபுனைவோர் புக்கமொழிச் சொல்லைஎலாம்
அள்ளிச் செருகி அயன்மொழியின் ஓசைதனைச்
சொல்லிக் கதைக்கின்றார் சொன்னாற் புரிவதிலை;
செம்மொழியாம் நம்மொழிக்குச் சேயாய்ப் பிறந்திருந்தும்
எம்மொழிதான் வந்தாலும் ஏத்தித் துதிக்கின்ற
பேதை மனத்தவராய்ப் பேரால் தமிழரென்பார்
தீது வரும்நிலையில் செந்தமிழைக் கண்டாலும்
ஏதும் அறியா திருக்கின்றார் பேரளவில்;
ஓதுந் தமிழின் உயர்வொன்றும் எண்ணுகிலார்;
தாய்மொழிக்குத் தன்னுரிமை தாராத வன்கொடுமைப்
பேய்நிலையைக் கண்டபினும் பேசா திருக்கின்றார்;
இத்தகுநன் மாந்தர்தமை எம்கம்பன் காணுங்கால்
“பித்தரெனத் தக்கவரைப் பிள்ளைஎனப் பெற்றாளே!
நன்றறிவு காண்கின்ற நாளிவர்க்கு வாராதோ?”
என்றெல்லாம் எண்ணி இரங்கிமனம் வெம்பிடுவான்;
எல்லா வுயிர்க்கும் பிறப்பொக்கும் என்றுணர்ந்தும்
அல்லா நெறிசென்றோம் அப்பிறப்பில் தாழ்வுயர்வும்
செல்வம் பதவியெனச் செப்பும் அவற்றுள்ளும்
பல்வகைய வேற்றுமை பண்ணிப் பிளந்தோம்