178 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
30 இதுவா முன்னேற்றம்? முன்னேற்றம் பெற்றுவிட்டீர் மூடத் தனத்தைஎலாம் பின்னேற்றிச் சுட்டெரித்தீர் பேருவகை கொள்கின்றோன்; ஆனாலுந் தாய்க்குலத்தீர் அன்பால்நான் ஒன்றுரைப்பேன் மேனாளில் செய்தவற்றை மீண்டும் நினைந்துளத்தில் வாங்கும் பழியுணர்வால் வாட்டாதீர் ஆண்குலத்தை; ஏங்கும் அடிமையென எண்ணி வருத்தாதீர்; முன்னேற்றம் என்றுரைத்து மொய்குழலீர் செய்பவைதாம் இந்நாட்டுப் பண்பாட்டை எள்ளி நகையாடும்; கார்குழலைக், கொவ்வைக் கனியிதழை, வண்ணஎழில் சேர்முகத்தைக், கைவிரலைச் செய்யும் அலங்கோலம் கண்டுவிடின் ஐயஒ கண்ணீர் பெருகிவரும்; பண்டை எழில்சிதைக்கும் பான்மையிதா முன்னேற்றம்? கொண்டான் தவித்திருக்கக் கொஞ்சுமொழிப் பிள்ளைகளும் திண்டாடிக் கூவத், தெரிவையர்கள் சங்கமென்று வீட்டை மறந்துவிட்டு, வெள்ளைப் பொடிபூசி ஈட்டும் பணச்செருக்கை எல்லார்க்கும் காட்டுதல்போல் கையில் அசைந்தாடக் காசுப்பை தொங்கவிட்டு, மெய்யின் எழில்காட்டி, வீதிஎலாஞ் சுற்றாதீர்; பெண்மையைத்தான் தெய்வமென்று பேசுகின்றான் பாரதிஅம் மென்மையைத்தான் ஏன்மறந்தீர்? மேவியநல் இல்லறத்தில் ஏற்றுந் திருவிளக்கே ஏந்திழையார் என்றுரைப்பர் |