பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்179

தூற்றுந் தெருவிளக்காய்த் தோன்றுவதேன்? திங்கள்முகம்
காய்ந்துலர்ந்து காண்பதுமேன்? கட்டழகு மேனியெலாம்
தேய்ந்துலர்ந்து வாடியதேன்? சிந்திப்பீர்; நாகரிகப்
பேரால் கடைச்சரக்கைப் பேணுவதோ முன்னேற்றம்?
தீராப் பெருநோயாய்த் தீப்பழக்கம் சூழ்ந்ததுவே!
மேலாடை யில்லாமல் மேனி மறைக்காமல்
நூலாடை என்றுசொலி நுண்ணிடையில் சுற்றிவிட்டு
மெய்யெல்லாங் காட்டுகிற செய்கையிதோ முன்னேற்றம்?
தையல் இனத்துதித்தீர் தாய்க்குலத்தீர் ஆய்ந்துரைப்பீர்;
நாட்டை உருவாக்கும் நல்லகுலம் நீங்களம்மா
பாட்டால் குறைசொன்ன பான்மைக்குச் சீறாதீர்;
கல்வியிலும் ஆட்சியிலும் காட்டுந் திறமையிலும்
பல்வகையாம் நுண்கலையின் பாங்கினிலும் ஓர்நிகராய்
முன்னேற்றங் கொண்டுயர்க; மொய்குழலீர் நாடுயரும்
நன்னோக்கங் கொண்டுரைத்தேன் நான்.

திருச்சி வானொலி நிலையம்
14.1.1966