180 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
31 பெண்ணின் பெருமை ஆண்மைஎனப் பெண்மைஎனப் பேசு கின்ற ஆயிரண்டின் கூட்டுறவே உலகம் ஆகும்; ஆண்மையின்றிப் பெண்மையிலை பெண்மை யின்றி ஆண்மையிலை; வீரமொன்று; காதல் ஒன்று; மாண்பமைந்த இவ்விரண்டும் உயிர்ப்பண் பாகும்; மாநிலத்தின் வளர்ச்சிக்கும் இவையே வித்தாம்; வீண்மையது மேல்கீழென் றிவற்றுட் காணல்; வியனுலகின் இருவிழியே ஆண்மை பெண்மை. இருவிழியுள் உயர்ந்ததென ஒன்றைப் போற்றி இழிந்ததென மற்றொன்றைத் தாழ்த்தித் தூற்றி வருபவரும் உளராயின் பித்தர் *என்கோ? வகைகெட்ட குறைபட்ட மதியர் என்கோ? ஒருபொருளைக் காண்பதெனின் விழியி ரண்டும் உறுதுணையாக் கொளலொன்றே இயற்கையாகும்; அருள்வழியில் இல்லறந்தான் இனிதி யங்க ஆண்மையுடன் பெண்மையிரு விழிக ளாகும், ஆணுயர்வா பெண்ணுயர்வா என்ற ஐயம் ஆறறிவுங் கூரறிவுங் கொண்டோர் தம்பால் நாணும்வகை நானிலத்தில் தோன்றக் கண்டோம்; நலமில்லாப் புலமில்லா ஐயம் அன்றோ?
*என்கோ - என்பேனா |