பக்கம் எண் :

184கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

உயிரினத்திற் கமைந்ததோர் இயற்கைப் பண்பே
      உரிமைஎனச் செம்பொருளோர் உரைப்பர்; ஆனால்
பயிரினத்தில் விலங்கினத்தில் பறந்து வாழும்
      பறவைமுதல் அஃறிணையில் உரிமை யாவும்
உயிரெனவே நிலைபெறுங்கால், பகுத்து ணர்ந்த
      உயர்திணையில் பெண்ணுரிமை மறுத்தல் ஏனோ?
*செயிர்அவர்மேல் தோன்றுவதேன்? சமமா எண்ணிச்
      சேர்ந்துறைந்து வாழ்ந்தாலென்? குறைந்தா போகும்?

**தமிழ்முனிவர் தாய்க்குலத்தின் பெருமை எல்லாம்
      தந்துரைத்த வண்ணமொரு சிலவே சொன்னேன்;
அமுதமொழிப் பாவையர்க்கு நான றிந்த
      அன்புரைகள் ஒன்றிரண்டு புகலல் வேண்டும்;
உமியளவுங் குறைசொல்லும் எண்ண மில்லை
      ஒவ்வாத செயல்முறைகள் காணும் போது
குமுறுமென துளக்கருத்தைச் சொல்வ தொன்றே
      கொண்டகடன்; எனக்கதுவே இயல்பும் ஆகும்,

கற்றறிந்த மகளிர்சிலர் திரும ணத்தைக்
      கடிந்தொதுக்கக் காண்கின்றேன்; ‘கணவ னுக்கோர்
உற்றடிமை ஆவதுவோ? பிள்ளைப் பேறாம்
      உறுதுயரால் சாவதுவோ? அடிமை அல்லோம்;
பெற்றவர்சொற் படிநடவோம்’ என்றே ஆர்ப்பர்;
      பெண்ணினமே திருமணத்தை வெறுத்து விட்டால்
அற்றுவிடும் மாந்தரினம்; பிறப்பே இல்லை;
      அன்னைநிலைக் கஞ்சுவதோ? இயல்போ ஈது?


*செயிர் - கோபம், **தமிழ் முனிவர் - திரு.வி.க.