5 வகுப்பறையும் மாணவரும் “வகுப்பறையா? கொலைக்களமா? இல்லை யில்லை; வாய்ப்பூட்டுச் சட்டங்கள் உலவும் மன்றம்; நகைத்துவிளை யாடுகிற சுதந்தி ரத்தை நசுக்குகிற உலைக்கூடம்; உரிமை யாவும் தகர்க்கின்ற சம்மட்டி வைக்குங் கொட்டில்; தடையின்றிப் பறக்கின்ற உணர்வை எல்லாம் தகைக்கின்ற கிளிக்கூடு; கதவும் பூட்டும் தாங்காத சிறைச்சாலை; அடிமைச் சாலை.” ‘உயர்கல்வி பயில்கின்ற சாலை என்பார் உணர்ச்சிகளைப் பிழிந்தெடுக்கும் ஆலை யாகும்; அயர்வகல நிழல்நல்கும் சோலை என்பார் அயர்வுடனே வெம்மைதரும் சாலை யாகும்; துயரகலும் கலைபயின்றால் என்பர் தேர்வுத் தொல்லைகளாற் கலங்கவைப்பர்; கல்லூரிக்குப் பெயர்வரவே எம்மைஎலாம் கட்டுப் பாட்டின் பேர்சொல்லி அடிமைஎன அடைத்து வைப்பர்.’ “எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பார் எமைமட்டும் அடிமைகளின் சின்னம் என்பார்; கல்லாரும் மயங்குமிசைத் தட்டுப் பாட்டைக் காதுகளில் பாயவிடும் நேரம் பார்த்துச் |