மனிதரைக் கண்டு கொண்டேன் | 201 |
3 அப்பரடிகள் திருத்தலங்கள் பலசென்று, கசிந்து நின்று திருவாயால் தேவாரம் பாடி வந்தார்; உருக்குலைந்த இடமெல்லாம் தூய்மை செய்ய உழவாரப் படையொன்று கையிற் கொண்டார்; அருத்தியொரு ஞானப்பால் உண்ட வாயால் அப்பரெனச் சம்பந்தன் அழைக்க நின்றார்; திருத்தமுற நடையறாத் துறவு பூண்டார்; திருநாவுக் கரசரெனப் புகழும் பெற்றார். வெப்புறுத்திக் கடலுக்குள் கட்டி வீழ்த்தி, வேதனைக்குள் தள்ளிடினும் கொள்கை மாறா அப்பருக்குச் சமமாக ஒப்பு ரைக்க ஆளில்லை; சமயங்கள் பலவுந் தோய்ந்து தப்பறுக்கும் நிலையுணர்ந்த தரும சேனர்; தவமுனிவர், வேளாளர், தகுதி மிக்கார்; அப்பழுக்கே இல்லாத ஒழுக்க சீலர்; அவர்கொண்ட தொண்டுள்ளம் வாழ்க வாழ்க. |