பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்201

3
அப்பரடிகள்

திருத்தலங்கள் பலசென்று, கசிந்து நின்று
      திருவாயால் தேவாரம் பாடி வந்தார்;
உருக்குலைந்த இடமெல்லாம் தூய்மை செய்ய
      உழவாரப் படையொன்று கையிற் கொண்டார்;
அருத்தியொரு ஞானப்பால் உண்ட வாயால்
      அப்பரெனச் சம்பந்தன் அழைக்க நின்றார்;
திருத்தமுற நடையறாத் துறவு பூண்டார்;
      திருநாவுக் கரசரெனப் புகழும் பெற்றார்.

வெப்புறுத்திக் கடலுக்குள் கட்டி வீழ்த்தி,
      வேதனைக்குள் தள்ளிடினும் கொள்கை மாறா
அப்பருக்குச் சமமாக ஒப்பு ரைக்க
      ஆளில்லை; சமயங்கள் பலவுந் தோய்ந்து
தப்பறுக்கும் நிலையுணர்ந்த தரும சேனர்;
      தவமுனிவர், வேளாளர், தகுதி மிக்கார்;
அப்பழுக்கே இல்லாத ஒழுக்க சீலர்;
      அவர்கொண்ட தொண்டுள்ளம் வாழ்க வாழ்க.