204 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
5 வாழிய தமிழ் முனிவர் தாயைத் தந்தையைத் தம்முடன் பிறந்தார் தோயும் அன்பைத் துறந்தனர் எனினும் முப்பா லூட்டிய முத்தமிழ் அன்பினில் தப்பா தொழுகுந் தவமுனி யவர்தாம்; வீட்டுப் பற்றும் வேறுள பற்றும் *வீட்டுந் துறவறம் விழைந்தவர் எனினும் நாட்டுப் பற்றினை நயந்திடுங் குறிக்கோள் வேட்டுப் பணிசெயும் வியத்தகு தொண்டர்; மனத்துப் பற்றினை விடுத்தனர் ஆகினும் இனத்துப் பற்றோ டியங்கும் நடத்தையர்; தம்மைத் தூற்றினும் தாம்பகை கொள்ளார் எம்மவர் என்றே இனநலம் பேணுவர்; கருத்து வேற்றுமை கருதில ராகிப் பொறுத்துச் செல்லும் புன்னகை முகத்தினர்; பன்னெறி யாளரும் பழகுதற் கேற்ற நன்னெறி யாளர் நாநலம் மிக்கார்; எளியோர்க் காணின் இரங்கும் நெஞ்சினர் அளியால் பற்பல அறங்கள் புரிபவர்: அருச்சனை ஒன்றே ஆண்டவன் அருளைப் பெறத்தகு வழியெனல் பேணா ராகி, உருக்குலைந் தொடுங்கிய உழைப்பினர் வாழத்
* வீட்டும் - அழிக்கும் |