பக்கம் எண் :

206கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

6
வாழிய மனித நேயம்

தொழத்தகுசுந்தரன்தோழமைக்குரியன்
பழுத்தபாவலன்பாரோர்போற்றும்
வலியதொண்டன்வஞ்சமில்நெஞ்சம்
மெலிபிறைசூடியமேன்மைக்கொடைஞன்
கண்ணுதற்பெருமான்கருத்தும்பிணைந்தது
பண்ணுறத்தோய்ந்தபைந்தமிழ்ஒன்றால்;
அதுபோல்,
குன்றக்குடியிற்குடியமர்ந்ததுமுதல்
என்றன்செந்தமிழ்ப்பாட்டால்இணைந்தவர்
ஈடுபட்டென்னைக்*‘கவியர’சென்றனர்
பீடுடைஅடிகள்பெயருக்கேற்றவர்
நாடுயர்வழிகள்நல்கியபெருமகன்
மண்ணிற்புழுவெனமடியாதுமாந்தர்
மண்ணில்நிமிர்ந்துவாழச்சொன்னவர்
எளியோர்க்கிரங்கும்இளகியநெஞ்சர்,
எளிமையும்வறுமையும்இருப்பதைநாடார்,
உழைப்போன்வயிற்றில்உறுபசிவந்து
வளைத்துவாட்டிவருவதுதாளார்,
ஆலயம்பதினாயிரம்எழுப்புவதின்
மேலாம்கல்விச்சாலைஎழுப்புதல்
எனப்பறைசாற்றும்இயல்பினர்,தொழில்கள்


* 1966 - ஆம் ஆண்டு, பறம்பு மலையில் நடைபெற்ற ‘பாரி விழா’வில் ‘கவியரசு’ என்ற பட்டத்தைக் குன்றக்குடி அடிகளார் வழங்கிச் சிறப்பித்தார்.