22 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
குறட்கருத்தை ‘சாந்துணையும் கற்க’ என்ற கோலமொழி தரும்பொருளை நூல கந்தான் தரற்குரிய இடமாகும்; பொழுதை எல்லாம் தக்கபடி பயன்படுத்திப் பெருமை கொள்க. அன்பருடன் நகைமொழிகள் பலவும் பேசி அரட்டையடித் தலைவதுதான் பொழுது போக்கா? நண்பருடன் திரைப்படங்கள் பார்த்து விட்டு நடுத்தெருவில் திரிவதுதான் பொழுது போக்கா? என்பெருமை கண்டீரோ? பொழுதை எல்லாம் இவ்வண்ணம் போக்கடித்தால் பயனே இல்லை; மின்பொழுதும் வீணின்றி நூல்ப டித்து மேம்படுக, பருவத்தே பயிரைச் செய்க. உலகரங்கில் அரசியலில் தனித்து நின்ற ஒருமனிதர் இராசகோ பாலர் என்பார் நிலவுபுகழ் மூதறிஞர் எனவு யர்ந்தார்; நிகரில்லாப் பேச்சாளர், எங்கள் நெஞ்ச மலருறையும் பண்பாளர், காஞ்சி அண்ணா வான்புகழின் உச்சிக்கே சென்றார் என்றால் குலவுபுகழ்ச் சென்னைநகர்க் ‘கன்னி மாரா’ நூலகத்தை ஏணியெனக் கொண்டே யன்றோ? |