பக்கம் எண் :

22கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

குறட்கருத்தை ‘சாந்துணையும் கற்க’ என்ற
      கோலமொழி தரும்பொருளை நூல கந்தான்
தரற்குரிய இடமாகும்; பொழுதை எல்லாம்
      தக்கபடி பயன்படுத்திப் பெருமை கொள்க.

அன்பருடன் நகைமொழிகள் பலவும் பேசி
      அரட்டையடித் தலைவதுதான் பொழுது போக்கா?
நண்பருடன் திரைப்படங்கள் பார்த்து விட்டு
      நடுத்தெருவில் திரிவதுதான் பொழுது போக்கா?
என்பெருமை கண்டீரோ? பொழுதை எல்லாம்
      இவ்வண்ணம் போக்கடித்தால் பயனே இல்லை;
மின்பொழுதும் வீணின்றி நூல்ப டித்து
      மேம்படுக, பருவத்தே பயிரைச் செய்க.

உலகரங்கில் அரசியலில் தனித்து நின்ற
      ஒருமனிதர் இராசகோ பாலர் என்பார்
நிலவுபுகழ் மூதறிஞர் எனவு யர்ந்தார்;
      நிகரில்லாப் பேச்சாளர், எங்கள் நெஞ்ச
மலருறையும் பண்பாளர், காஞ்சி அண்ணா
      வான்புகழின் உச்சிக்கே சென்றார் என்றால்
குலவுபுகழ்ச் சென்னைநகர்க் ‘கன்னி மாரா’
      நூலகத்தை ஏணியெனக் கொண்டே யன்றோ?