7 ஒப்பனையும் மாணவரும் பாடலெது? உரைநடைதான் எதுவென் றிங்குப் பகுத்துணர இனமுணர இயலா வண்ணம் மேடையிலே முழங்குவதைக் கேட்டுக் கேட்டு மெல்லியஎன் உள்ளமெலாம் நைந்து நைந்து வாடுகிறேன்; அதுபோலக் கல்வி கற்க வருபவர்தம் ஒப்பனையால் அவர்த மக்குள் ஆடவர் யார்? மகளிர் யார்? தோற்றத் தாலே அடையாளந் தெரியாமல் மயங்கு கின்றேன். பிடர்வரையில் தொங்குகிற முடிகள் வாரிப் பேணாமல் சிதறுண்டு முகம்ம றைக்கும்; தொடர்ந்துவரும் தமிழ்வீரந் தாழ்ந்து விட்ட துயரத்தைத் தொங்குகிற மீசை காட்டும்; அடர்செடிகள் விலங்கினங்கள் பொறித்த சட்டை *அடவியில்வாழ் மாந்தரையே நினைவிற் கூட்டும். இடையணிந்த தொளதொளத்த காலின் சட்டை இருக்கின்ற தூசியெல்லாம் தெருவிற் கூட்டும். முகமதிய ரானவர்தாம் கைலி என்று மூட்டிவைத்த ஆடைதனை உடுத்திக் கொள்வர்; *முகமதிய ரானவரும் பயிலும் போது முற்போக்கென் றதனைத்தான் உடுத்து கின்றார்;
* அடவி - காடு * முகம் மதியர் ஆனவரும் - மதிபோன்ற முகமுடைய மகளிரும் |