24 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
பகலிரவில் எவ்விடத்தும் கைலி யைத்தான் பகட்டாக மாணவரும் உடுத்து கின்றார்; நகைமொழிக்குக் கூறவில்லை; அம்ம தத்து நாடாக்க அவரெல்லாம் நினைந்தார் போலும். நலங்கோலம் செய்கின்ற பருவம் ஈது நாகரிக உடையணியும் பருவம்; ஆனால் அலங்கோலஞ் செய்தன்றோ உலவு கின்றார்; அழகுக்குப் பொருளொன்றும் விளங்க வில்லை; *நலங்காத புறக்கோலம் செய்தல் ஒன்றோ நன்மைதரும்? அகக்கோலம் வேண்டு மன்றோ; நலங்காணும் நாட்டத்திற் சொல்லு கின்றேன் நாகரிக வளங்காண முயல்க நன்றே.
நலங்காத - கசங்காத |