222 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
மன்றினில் மகிழ்தல் ஒன்றே வாழ்க்கையின் பயனாக் கொண்டான் வென்றிகள் பலவும் பெற்றான் விழையுமென் நட்பும் பெற்றான். மழலையர் தெரிந்து கொண்டு மனத்தினிற் பதித்துப் பாடிப் பழகிடப் பாடல் தந்தான்; பச்சிளங் குழந்தை நெஞ்சில் அழகிய பாட்டு ணர்ச்சி அரும்பிட வேண்டும் என்ற விழைவுடன் ஈடு பட்டான் வியத்தகு குறிக்கோள் கொண்டான். குழந்தைகள் பாடல் பாடக் குழந்தையின் உள்ளம் வேண்டும் பழந்தமிழ் உணர்வு வேண்டும்; பண்புறும் நெஞ்சும் வேண்டும்; வழங்கிடும் பண்பு வேண்டும் வாய்மையோ டெளிமை வேண்டும் மொழிந்திடும் அனைத்துங் கொண்டான் முனைப்பிலா வள்ளி யப்பன். 21.3.1981 |