பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்229

19
வணிக நோக்கறியான்

பயிலும்நாள் தொடங்கி என்பாற்
      பழகிடும் நண்பன்; அன்பு
செயலிலே குறைவு காணேன்;
      அன்றுபோற் செழுமை கண்டேன்,
மயலுறும் செருக்கே யில்லா
      மதிமிகு புலமை கண்டேன்;
அயலென எண்ணா தென்னை
      அவனுடன் பிறப்பென் றெண்ணும்.

உளத்திலே ஒன்றை வைத்தும்
      உதட்டில்மற் றொன்றை வைத்தும்
கிளத்துதல் அறியா வாயன்;
      கெடுதலை நினையா நெஞ்சன்
களைப்புறும் பொழுதில் மற்றோர்
      கனிவுடன் செய்த நன்றி
உளத்தினிற் பதிய வைத்தே
      உணர்ந்துணர்ந் துருகும் மேலோன்.

பிணிபல சூழ்ந்த போதும்
      பிறக்கிடல் அவனுக் கில்லை
துணிவுடன் எதிர்த்து நின்றே
      துயர்களை மறந்து நிற்பான்
பணிவுடன் இன்சொற் பேசிப்