பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்233

22
பாளைநகர்ப் பண்பாளன்

சொல்லப்பழகியவன்சொல்லரியநண்புளத்தால்
வெல்லப்பழகியவன்வீரனவன் - நல்லனவன்
என்னுளத்தைத்தொட்டுணர்ந்தேஏற்றதுணைபுரியும்
பொன்னுளத்தன்ஓர்வயிற்றோன்போல்.

உண்ணென்றுரைத்துரைத்தேஊட்டிஎனதுளத்தைத்
தண்ணென்றியற்றுந்தகவுடையன் - பண்ணொன்றும்
பாட்டெனவேஎன்பாற்பழகும்இயல்புடையன்
கூட்டுணர்வால்விஞ்சுமனங்கொண்டு.

வந்தோர்குறையகலவாழப்பரிந்துரைகள்
தந்துபுகலளித்துத்தாங்குமிடம் - வந்தஎனைக்
கேளாகஎண்ணிக்கிளர்ந்தெழுந்தஅன்புமணி
வேளாளன்வாழ்கின்றவீடு.

கொஞ்சும்மொழியுடையன்கூடாரும்வந்திவன்பால்
தஞ்சம்எனஒருசொல்தந்துவிடின் - நெஞ்சுருகி
அஞ்சல்நிலையத்தலுவல்புரிவதனால்
அஞ்சலெனச்சொல்வான்அவன்.

கதிரடித்தநெல்லைக்களங்குவிக்கும்நெல்லைப்
பதியடுத்தபாளைநகர்ப்பண்பன் - மதிபடைத்த
வள்ளுவனார்சொற்றபடிவாழ்க்கைத் துணைநலந்தான்
கொள்ளுவதால்கொண்டான்குணம்.


ஓர் வயிற்றோன் - சகோதரன், அஞ்சல் - அஞ்சாதீர்