246 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
26 அழகின் சிரிப்பில் கலைஞர் விரித்துவரும் வலையிலெலாம் தப்பி நின்று வீழாமல் சிரிக்கின்ற தமிழ ணங்கே! குறித்துவரும் பகையஞ்சிப் புறமிட் டோடக் கூரறிவுப் படைதந்த எங்கள் தாயே! நெருப்புபுனல் செல்கறையான் வாய்கள் தப்பி நின்றொளிரும் ஏடுடையாய்! அம்மா! நின்றன் சிரித்தமுகங் காண்பதற்கே என்றும் வாழ்வேன் சிறியன்எனைக் காப்பதுநின் கடமை யாகும். அஞ்சுகத்தின் மடிவளர்ந்தாய், முத்து வேலர் அகம்மகிழ நடைபயின்றாய், ஆரூர்ப் பள்ளிப் பிஞ்சுமனத் தோழருடன் கல்வி கற்றாய், பெரியாரின் ஈரோட்டுப் பள்ளி சென்று நெஞ்சுரத்தைச் சிக்கனத்தைக் கற்றுக் கொண்டாய் நெகிழ்ந்துருகும் அண்ணாவின் கருணைமிக்க நெஞ்சகத்தைக் காஞ்சியிலே பெற்றுக் கொண்டாய் நெருக்கடியில் சிரிப்பதற்கு யாங்குக் கற்றாய்? மேடையிலே வீசுகின்ற தென்றற் காற்றே மெல்லியரின் இதழ்விரித்தால் மக்கள் நெஞ்ச ஓடையிலே மலர்சிரிக்கும், மணம்சி ரிக்கும், உகந்தவர்தம் நெஞ்சமெலாம் சுளிசி றக்கும்; |