248 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
பாருக்குக் கடல்காவல்; பைந்த மிழ்ப்பண் பாட்டுக்கு நீகாவல்; ஆழ்ந்த ஆணி வேருக்கு மண்காவல்; தமிழர் நாட்டு வேலிக்கு நீகாவல்; பெருகி ஓடும் நீருக்குக் கரைகாவல்; கழகத் தோழர் நெஞ்சுக்கு நீகாவல்; இந்த நாட்டில் யாருக்கு யார்காவல் என்று மக்கள் அஞ்சிவரும் இந்நாளில் நீதான் காவல். மணிகொழிக்கும் பொன்கொழிக்கும் சந்த னத்தின் மணங்கொழிக்கும் எழில்கொழிக்கும் அருவி என்பர்; அணிகொழிக்கும் பொருள்கொழிக்கும் எழில்கொ ழிக்கும் அரியதமிழ் மணங்கொழிக்கும் நினது பேச்சில்; அணில்கொறிக்கும் தீங்கனிகள் தொங்கும் சாரல் அருவியொரு ஆறாகி வளங் கொழிக்கும்; அணில்கொறித்த கனிதொங்கும் தமிழர் நாட்டை அழகாக்கி வளமாக்கும் ஆறும் நீதான். எதிரிகட்கு வல்லினமாய், நின்னை அண்டி இருப்பவர்க்கு மெல்லினமாய், இரண்டும் இல்லா நொதுமலர்க்கோ இடையினமாய் மெய்யெ ழுத்து நுவல்கின்ற மூவினமாய் விளங்கு கின்றாய்! மதுரைநகர்ப் பாண்டியனார் சேரர் சோழர் மன்னர்வழி மூவினத்தின் மெய்யும் ஆனாய்! எதுவரினும் மெய்யாக விளங்கும் உன்னை எவரெவரோ பொய்யாகப் பேசு கின்றார்! பதியிலுளார் நின்பெயரை மு.க. என்று பகர்வதற்குக் காரணமென்? முத்து வேலர் புதல்வரென உணர்த்துதற்கா? இல்லை யில்லை புலிநிகர்த்த நெஞ்சுடையான் எதிலும் என்றும் |