250 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
‘சிரிப்பென்னும் மருந்துண்டேன் அம்மருந்தைச் சித்தர்திரு வள்ளுவனார் தந்தா’ரென்று உரைக்கின்றாய் நெஞ்சுக்குள் என்செ விக்குள் ஒருசிறிது விழக்கேட்டேன்; குறள்நூல் சொல்லி விரிக்கின்ற பொருளனைத்தும் விரித்துச் சொல்லி விளக்கிவரும் புலவன்நான்; எனினும் இன்னும் வருத்திவரும் கலைக்கு மருந்து கண்டு வாழ்வதற்குக் கற்கவில்லை; கலைஞன் நீதான். ஒருதுயரம் வந்தாலும் உள்ளம் வாடி ஒடுங்குகின்றேன் சிரிப்பதற்கோ இயல வில்லை; வருதுயரம் எதுவெனினும் நிமிர்ந்து நின்று வாய்விட்டுச் சிரிக்கின்றாய் கலக்க மின்றி; கருணைநிதி கலங்கிவிடின் கழகத் தோழர் கலங்குவரே எனஎண்ணி மறைக்கின் றாயா? வருபவைதாம் வரட்டுமெனை நாட்டுக்காக வழங்கி விட்டேன் எனஎண்ணிச் சிரிக்கின்றாயா? அறுசமயம் பிறசமயம் வெறுப்ப வன்தான் ஆனாலும் அன்பழகற்(கு) அருகன் ஆனாய்; பிரிவுதரும் சாதிக்குப் பகைவன் தான் நீ பிழையறியாச் சாதிக்கு நண்பன் ஆனாய்; ‘உறுதியுடன் விடுதலையைப் பெற்று விட்டோம் உரிமையுள தென்னரசும் உடையோம்’ என்று முரசொலியை முழக்குகின்றாய் ஆனால் இந்த, முடியரசன் பாட்டுக்குள் கைதி ஆனாய். சிவபெருமான் குறைமதியைத் தலையில் வைத்தான்; சிந்தனையால் நிறைமதியைத் தலையில் வைத்தாய்; சிவபெருமான் தலைமதியன்; நீயோ என்றும் சிரிக்கின்ற முகமதியன்; அற்றை நாளில் |