252 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
பாளைநகர்க் கொட்டிலுக்குள் போவென் றாலும் பாராளக் கோட்டைக்குள் வாவென் றாலும் பாளைநிகர் சிரிப்புடனே செல்கின் றாய்நீ பக்குவஞ்சேர் ஞானிஎன ஆகிவிட்டாய்; காளைகளுக் குன்பெருமை தெரிய வில்லை கலைத்துறையின் திலகமுந்தான் அறிய வில்லை; நாளைவர லாறுரைக்கும் நாய கன்நீ நான்புகழ்ச்சி சொல்லவில்லை உண்மை சொன்னேன். தருக்குடனே அதிகார போதை ஏறித் தனிக்குடையின் கீழிருந்தோர்கொண்டு வந்த நெருக்கடியில் சிரித்தவன்நீ; நின்னைக் காண நிமிர்ந்தெழுந்த கூட்டத்தில் இடித்துத்தள்ளும் நெருக்கடியில் சிரிப்பவன்நீ; உறுதி யோடு நிற்பவர்தம் திருமணங்கள் நடத்தி வைத்துப் பொறுப்புடனே கழகத்தைக் காக்கப் பேச்சில் பொடிவைத்துச் சிரித்தெமையும் சிரிக்க வைத்தாய். திரையுலகில் பராசக்தி வந்த போதுன் திறமையெலாம் கண்டவர்கள் புகழ்ந்து நின்றார்; அரசியலில் பராசக்தி வந்தபோதுன் ஆற்றலெலாம் கண்டவர்கள் வியந்து நின்றார்; இருபெரிய பராசக்தி வலிமை எல்லாம் எழுத்தாலே வென்றவன் நீ; இனிமேல் யார்க்கும் வருமுலகில் இராசக்தி உன்னை வெல்ல; வருபகைகள் நண்புகொள ஏங்கிநிற்கும். கம்பனொரு கதைசொன்னான்; இராமன் மேலே கண்வைத்தாள் சூர்ப்பணகை, குறும்பு செய்தாள்; வம்புபல இழைத்திருந்தாள், இளையோன் கண்டு, வந்தவளை மூக்கறுத்தான்; அதனை நோக்கி |