28 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
அறிவியலே வளராது; களைக ளாக அறியாமை மண்டுமெனக் கண்டு கொண்டார்; “நெறிவிலகி வந்துவிட்டோம்; கற்பா றைக்குள் நெற்பயிரா விளையும்?”என ஒதுங்கி விட்டார் சிந்தனைக்கு வளர்ச்சிதரும் இதழ்கள், நல்ல சீர்திருத்தக் கொள்கைதரும் இதழ்கள், ஆயும் புந்திக்கு விருந்தளிக்கும் இதழ்கள், போற்றும் பொதுமைக்கு வழிவகுக்கும் இதழ்கள் விற்க முந்திக்கொண் டிங்கெழுந்து காலைப் போதில் முனைப்போடு கடைவிரித்தார்; மாலை எனும் அந்திக்குள் திறந்தகடை மூடி விட்டார் அவைகொள்வா ரில்லாத கார ணத்தால் நல்லறிவைப் பதப்படுத்தும் பருவத் துள்ள நம்மிளைஞர் இவற்றையெலாம் புறக்க ணித்துப் புல்லுணர்வைக் கிளறிவிடும் இதழ்கள் வாங்கிப் போற்றுவிரேல் அறிவுநுனி மழுங்கிப் போகும்; அல்வழியில் மனஞ்செல்லும்; பண்பு தேயும்; அருமைமிகும் இளம்பருவம் கருகி வீழும்; கல்வியது சருகாகிக் காற்றிற் போகும்; காளையர்தம் பிஞ்சுள்ளம் வெம்பி வீழும். |