பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே29

10
திரைப்படமும் மாணவரும்

பண்பாடே சீர்குலைந்து போன தென்றால்
      படத்துறைதான் முதற்களமாம்; அதை நினைந்தால்
கண்பாடு கொள்வதற்கு மனமேயில்லை;
      கயமைகளின் விளைநிலந்தான் அந்தப் பூமி;
நண்பாலே உரைக்கின்றேன் இற்றை நாளில்
      நடிகர்யார் மாணவர்யார் தெரியவில்லை;
கண்போலக் காக்குமிளம் பருவந் தன்னைக்
      கயமைக்குள் கூத்தடிக்க விட்டு விட்டார்.

நாளெல்லாம் படித்தவைதாம் நினைவில் நில்லா
      நடிகையின்பேர் நீங்காது நினைவில் நிற்கும்;
*கோளெல்லாஞ் சொல்கின்ற சாத கத்துக்
      குறிப்பெல்லாம் அகலாது நினைவில் நிற்கும்;
தேளெல்லாம் கொட்டியது போலி ருக்கும்
      தேர்வெனிலோ படித்தவையும் மறந்தே போகும்.
தோளெல்லாம் பூரிக்கும் திரைப்ப டத்தில்
      தொங்கவிட்ட ‘ஏ’என்னும் எழுத்தைக் கண்டால்

படிப்புக்கு மதிப்பளிக்கும் காலம் நல்ல
      பண்புக்கு மதிப்பளிக்குங் கால மாகும்;
நடிப்புக்கு மதிப்பளிக்குங் காலம் இந்த
      நாட்டுக்கே தீங்கிழைக்குங் காலம்; தோகை


கோள்எல்லாம் - கிரகங்கள்