30 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
நடிப்புக்கு விழைகின்ற காலம்; இங்கு நற்கலைகள் வளர்கின்ற காலம்; கோழித் துடிப்புக்கு மயங்குகின்ற காலம் நாடு துறைமாறிப் போய்விட்ட காலம் ஆகும். சிறந்திருந்த காலந்தான் இறந்த காலம்; சீர்களெலாம் நெகிழ்காலம் நிகழுங் காலம்; வறந்திங்குப் பண்பெல்லாங் காய்ந்து வாடி வருங்காலம் உதிர்காலம் ஆகா வண்ணம் திறங்கொண்டு மாணவர்காள் எழுக; உங்கள் திருநாட்டை விழிதிறந்து காண்க; உள்ளம் திறந்திங்குப் பேசுகின்றேன் எதிர்கா லத்துத் திருவிளக்கை ஏற்றுவது நுங்கள் கையே. |