போழ்ந்திடல் முறையோ? இந்தப் புன்மையில் இறங்கி நீவிர் ஆழ்ந்திட நினைந்த தேனோ? ஐயவோ கொடுமை யன்றோ. உருவமும் உடையும் உங்கள் உயர்வினைக் காட்ட வில்லை; பருவமும் பழகும் பாங்கும் படிப்பினைக் காட்ட வில்லை; ஒருவனும் குறைகள் சொல்லா தொழுகுக இனிமே லேனும்; கருவறை பழுது பட்டாற் கையினிற் குழந்தை ஏது? பாடங்கள் புகட்டும் பாங்கைப் பையவே மறந்து போனீர் கூடங்கள் திறவா வண்ணங் கூடிநீர் தூண்டி விட்டால் ஏடுங்கள் கையிற் கொண்டும் என்னதான் பயனோ சொல்வீர் ஓடங்கள் ஓட்டை யானால் ஒல்லுமோ கரையைக் காண? |