பக்கம் எண் :

38கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

மடத்தன மன்றோ? நாட்டில்
      மக்களேன்? சட்டந் தான்ஏன்?
தடுத்திதை நிறுத்தா விட்டால்
      தாங்கிடுஞ் செங்கோல் ஏனோ?

கைப்பணம் ஒன்றுக் காகக்
      கடமையை விற்கும் மாக்கள்
பொய்ப்பிணம் போல்வர்; நாட்டில்
      நோய்செயும் புழுக்க ளாவர்;
பைப்பணம் காட்டி விட்டால்
      நாட்டையும் பகைக்கு விற்பர்;
செய்ப்புலக் களையால் நன்மை
      செழித்திட வழியே இல்லை.

ஆடாது சமன்செய் கோல்போல்
      அவரவர் செயலுக் கேற்பக்
கோடாது நடுவில் நின்று
      கூறலே தீர்ப்பின் பாங்கென்
றேடாளுஞ் சான்றோ ரெல்லாம்
      இயம்புவ துணர்ந்த நல்லோர்
ஊடாக இருத்தல் கண்டேன்
      உள்ளத்தில் அமைதி கொண்டேன்