மகிழ்வுடன் சம்ப ளங்கள் மருத்துவ மனையிற் கொள்வர்; புகுபிணி யாள ருக்கோ புகலிடம் மருந்த ரில்லம்; மிகுபொழு தழிவ தந்த மேலவர்க் கில்லி லேதான் தொகுபொருள் நோக்க மானால் துவண்டவர் எங்கே செல்வர்? புதுமனை மருத்து வர்க்குப் பொருள்தரச் செல்வருண்டு *1பொதுமனை புகுவ தன்றிப் புகலிடம் வறியர்க் கேது? மதுவுணும் மதியர் போல மருத்துவர் மயங்கா ராகி எதுசரி யெனநி னைந்தே ஏற்றதோர் பணியைச் செய்க.
*பொது மருத்துவமனை |