50 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
‘கொள்ளைகள் கொலைகள் செய்வோர் பதுங்கிடும் கூடா ரம்போல் உள்ளதே சட்ட மன்றம்’ என்றதோர் உணர்வு தோன்றி உள்ளமே நொந்து போனார் ஊரவர்; அவர்தம் நெஞ்சில் வெள்ளமே திரண்டு வந்தால் வீணரின் நிலைஎன் னாகும்? வாக்குகள் அளித்தோம் சட்ட மன்றமர் வாய்ப்பைப் பெற்றோர் ஆக்குவர் நன்மை யென்றே ஆவலிற் காத்தி ருந்தோம்; தாக்குதல் நடத்து கின்றார்; தகாமொழி பேசு கின்றார் பூக்களில் தேனீ யில்லை புழுக்களே நெளியக் கண்டோம் நலந்தரு சொற்போர் அங்கே நடத்துவர் என்றி ருந்தோம் *வலம்படு மற்போர் ஒன்றே நடத்திட வகுத்து நின்றார்; சிலம்பமும் ஆடு கின்றார் செருப்புகள் வீசு கின்றார்; துலங்குமா சட்ட மன்றம்? தூவென இகழ்தற் காகும். தேர்தலில் அரசின் சார்பிற் செலவிடும் தொகைக ளெல்லாம் யார்பணம்? மக்கள் கட்டும் வரிப்பண மன்றோ? யாதும்
*வலிமை |