54 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
21 தேர்தலாற் கண்ட பயன் சாதிகளும் பொய்மொழியும் தன்னலமும் கையூட்டுந் தழைக்கும் நாட்டில் ஏதுபயன் விடுதலையால்? என்னபயன் தேர்தலினால்? எத்தர் வந்தே ஓதுகிற மொழியெல்லாம் உண்மையென நம்புபவர் உணர்வு கெட்டு *மேதிகளாய் உள மட்டும் மேதினியில் தேர்தலினால் மேன்மை யில்லை. சாதியைத்தான் முன்வைத்துச் சார்கின்றார் வேட்பாளர்; சமயம் பார்த்துச் சாதிக்கோர் அமைச்சரெனச் சண்டைவரும்; சாதிக்கா சட்ட மன்றம்? மீதிப்பேர் நிலைஎன்னாம்? வீழ்ந்தவரும் மேன்மைபெற வேண்டு மென்று **சாதிப்போர் வேண்டுமலால் ***சாதிப்போர் தேவையிலை சட்ட மன்றில். உண்மைகளைச் சொல்லிவிடின் ஒருபோதும் வெற்றியிலை உலர்ந்து போன மண்மதியர் முன்னின்று மனமறிந்த பொய்ம்மொழிகள் வழங்கி விட்டால் பெண்மையினம் வாக்களிக்கும் பேதையர்போல் ஆடவரும் பின்னே செல்வர் கண்ணிமைக்கும் முன்வெற்றி கண்டிடலாம் மாலையெலாங் கழுத்தில் வீழும்
*எருமைகள், *வற்புறுத்துவோர். *சாதிச்சண்டை. |