பக்கம் எண் :

56கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

22
கண்ணீர்த்துளி

பொற்புடைச் செல்வி பூம்புகார்த் தலைவி
கற்புடைத் தெய்வம் கண்ணகி கொழுநனைத்
தீதிலாச் செம்மலைத்திருடன் எனப்பொய்
ஓதிய உரைகேட் டோரா மன்னவன்
கொன்றனன் என்றதோர் கொடுமொழி செவிபுக
மன்றம் சென்றனள் வழக்கினில் வென்றனள்;
கன்றிய நெஞ்சங் கலங்கிய கண்ணகி
துன்றிய கண்ணீர்த் துளிகளைச் சிந்தினள்;
அன்றவள் சிந்திய அவலக் கண்ணீர்
கொன்றது மதுரைத் கொடுங்கோ லரசை
அல்லல் தாங்கா தழுத கண்ணீர்
மல்லல் வயல்சூழ் மாநில மன்னர்
செல்வம் தேய்க்கும் செறுபடை யாமெனச்
சொல்லும் திருமறைச் சொற்பொருள் மெய்யே;
எளியவர் சிந்தும் விழிநீர்த் துளிகள்
ஒளிவிடும் வாட்படை ஒக்கும் என்பர்;
ஆம்ஆம் அத்துளி அத்துணை யாற்றல்
தாமே பெற்றுள தன்மையை அறிகுவம்;
படியர சோச்சும் பான்மையைப் பெற்ற
முடியர சாகினும் குடியர சாகினும்
கொடுங்கோ லோச்சுங் குறிப்பினைக் காட்டிற்