58 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
23 எது நாட்டுப் பற்று? உழைப்பதே யின்றி நாடு வாழ்கவென் றுரத்துச் சொன்னால் தழைத்திடும் என்று நீவிர் எண்ணுதல் தவறே யாகும்; இழைத்திடுஞ் செயலொவ் வொன்றும் ஈன்றதாய் நாட்டைச் சாரும்; உழைத்திட முயல்வோ மென்ற உணர்வுதான் நாட்டுப் பற்றாம் உரிமையைக் கற்றுக் கொண்டீர் கடைமையை உதறி விட்டீர் ஒருநிலை தாழ்ந்தும் மற்ற ஒருநிலை உயர்ந்தும் நின்றால் வருபயன் ஒன்று மில்லை வளர்ச்சியும் வற்றிப் போகும் *இருநிலை சமமாய் நின்றால் நாட்டினில் ஏற்றம் உண்டாம். அலுவலர் இருக்கை மேலே அமர்ந்திடும் நேர மென்ன? பலவகை இதழ்கள் தூக்கிப் படித்திடும் நேர மென்ன?
*இருநிலை - உரிமையும் கடமையும் |