பக்கம் எண் :

60கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

24
உலகை நினையுங்கள்

உழைப்பினை நல்கா திங்கே
      உறங்கியே காலம் போக்கிப்
பிழைப்பினை நடத்த எண்ணல்
      பேதமைச் செயலே யாகும்
தொழத்தகும் தொழிலோர் சோம்பித்
      துஞ்சிடின் நாட்டு வாழ்வு
விழத்தகும் அன்றோ? உங்கள்
      வியர்வையால் உலகம் பூக்கும்.

அயர்வினை அகற்றல் வேண்டும்
      ஆர்ப்பொலி தவிர்த்தல் வேண்டும்
வியர்வையைச் சிந்தி நாளும்
      விளைவினைப் பெருக்கல் வேண்டும்
பயன்பெற விழைவோர் என்றும்
      பாடுபட் டுயர்தல் வேண்டும்
செயலிவை தொழிலோர் கொண்டால்
      சீர்பெறும் நமது நாடு

நாட்டினை உயர்த்தும் மாந்தர்
      உழைப்பினை நல்கல் மட்டும்
கேட்டினை அகற்று மென்று
      கிளத்திலேன்; செல்வம் அள்ளிப்