25 எழுத்துலகம் சதைப்பசிக்குத் தீனியிடும் சங்கரிகள் கூட்டத்தார் தடித்த நெஞ்சால் எதைக்கெடுத்தும் எழுதுகிறார் எதைக்கொடுத்தும் வாங்குகின்றார் இளைய நெஞ்சை; கதைப்படைப்பாம் ஐயஓ காமத்தின் படைப்பைத்தான் காட்டு கின்றார் அதைப்படிக்கும் சிறுவர்க்கும் ஆசையைத் தான் தூண்டுகின்றார் அனைத்தும் விட்டே எழுத்தாளர் கைகளிலே இருப்பதெல்லாம் எழுதுங்கோல் என்று கூறேன் பழுத்தோர்கள் வளர்ந்துவிடும் பண்பாட்டுப் பயிர்களெலாம் பாழாய்ப் போகக் கழுத்தறுக்க வைத்திருக்கும் கருக்கரிவாள் என்றுரைப்பேன்; காமத் தீயில் பழுக்காது காய்ச்சியிளம் பிஞ்சுள்ளத்தில் பாய்ச்சுகிற சூட்டுக் கோலாம், கதைக்கேற்ற படமென்பார் கவர்ச்சிதரும் படமென்பார் காமஞ் சொட்டும் சதைக்கேற்ற மெருகேற்றிச் சரிந்துவிழுந் துணிகாட்டிச் சாயம் பூசி |