68 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
27 ஓதிக்கெட்டவன் ‘யாதும் ஊரே யாவருங் கேளி’ரென் றோதிய மணிமொழிக் குரியவன் தமிழன்; எனினும் இவனைக் கேளிரென் றெண்ணும் மனிதனை மாநிலத் தியாண்டுங் காண்கிலேன் இவன்வாழ் ஊரை எனதூர் என்று தவறியும் நினைந்துகை தருவோ ரிலையே; ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’என் றோதும் இவனே யாவும் பிறரால் வருவன என்றே வாழ்நா ளெல்லாம் தெருவெலாஞ் சுற்றித் திரிதரல் கண்டேன்; ‘சாதலும் புதுவ தன்’ றெனச் சாற்றினன் யாதொரு செயலும் அஞ்சி யஞ்சிப் போதெலாம் செத்துப் புலம்பினன் அவனே; ‘இனிதென வாழ்வை மகிழ்தலும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே’ எனுமொழி இசைத்தவன் இவன்றான் எனினும் தாழ்செயல் பலவும் தயங்கா தியற்றி வாழ்வே இனிதென மகிழ்தலும் உண்டு; பழித்தும் இழித்தும் பகர்ந்து வாழ்வை மறுத்துப் பேசி வெறுத்தலும் உண்டு; ‘நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் |