பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே89

34
ஒப்பனை மகளிர்

அழகெனுமோர் சொல்லுக்கே அமைந்தபொருள்
      மங்கையர்தாம் எனினும் அன்னார்
*இழைமணியால் பொன்னகையால் எழில்மலரால்
      முகப்பொடியால் இடையிற் கட்டும்
**இழைதெரியும் மெல்லுடையால் விரல்நகத்தின்
      ஒதுக்குவதா சீர்தத் பண்பு
கள்ளாலே மயங்குதல்போற் கன்னியர்கள்
      சாயத்தால் இதழின் பூச்சால்
***குழைவகையால் சிறுகச்சால் கூடிவரும்
      எழில்காணக் கோலஞ் செய்வர்.

ஒப்பனைகள் பலசெய்தும் உருவத்தை
      அழகுறுத்தல் உலகி யற்கை;
அப்பணியில் தலைசிறந்தார் அரிவையர்தாம்
      தனித்தன்மை அவர்க்கே யாகும்;
அப்பப்ப! ஆனாலும் அவர்செய்யுங்
      கோலங்கள் ஆள்ம யக்கும்
தப்பினையே செய்துவிடும்; தவறுகளைச்
      சுட்டுதற்குத் தயங்கு கின்றேன்.

தயக்கத்தால் கூச்சத்தால் தவறுகளைக்
      கண்டிக்கத் தவறி விட்டால்
மயக்கத்தால் உழல்கின்ற மதியில்லார்
      கூட்டத்துள் வாழ்வேன் ஆவேன்;


*இழைத்துச் செய்யப்பட்ட **நூல் ***காதணி