90 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
நயத்தைத்தான் அவர்மனத்தில் விதைக்கத்தான் நாடுகிறேன்; நாணம் ஒன்றை நயக்கத்தான் நவில்கின்றேன்; *நல்லாராய் வாழ்வதைத்தான் நயந்து சொல்வேன் உள்ளாடை தெரியும்வணம் உடுத்துவதா நாகரிகம்? உடலிற் பாதி **தெள்ளாகத் தெரியும்வகை சீலைகளை ஒதுக்குவதா சீர்த்த பண்பு கள்ளாலே மயங்குதல்போற் கன்னியர்கள் இடைவயிறு காணும் வண்ணம் தள்ளாடிச் சரிந்துவிழத் ***தானைகளைத் தளர்த்துவதா தாய்மைப் பண்பு? பவளஇதழ் உடையரெனும் பாவையர்தாம் கற்றாளைப் பழத்தின் சாயம் தவழஅதிற் றடவிடுவர்; தளிர்விரலில் வளர்நகத்தில் தகத கக்கும் ‡சிவலைநிறம் பூசிடுவர்; செம்முகத்தில் வெண்பொடியைத் தேய்த்து வைப்பர்; அவரவர்தம் நிலைக்கேற்ப ஆடையெனச் சிறுதுணியை †அசைத்து நிற்பர். கடைச்சரக்கால் உடலழகு காண்பவர்க்குத் தெரிவுறவே கட்டி விட்டுக் கடைத்தெருவில் திரிவதுவா கன்னியர்க்கு முன்னேற்றம்? கலைகள் யாவும் படிப்பதிலே நூல்பலவும் படைப்பதிலே இல்லறத்துப் பாங்கு கற்று நடப்பதிலே உயர்பதவி தொடுப்பதிலே முன்னேற்றம் நாட வேண்டும்.
*நல்லவராக பெண்ணாக **தெயிவாக ***ஆடை ‡சிவப்பு நிறம் †கட்டி |