பக்கம் எண் :

118கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

5. ஏர்நின்றால்.....

நாடாள்வோர் செங்கோலும் உழவன் ஏந்தும்
      நலமிக்க கோலைத்தான் நோக்கி நிற்கும்;
வீடாளும் இல்லறத்து மாந்தர் தாமும்
      விளைவுசெயும் உழவனைத்தான் நோக்கி நிற்பர்;
கூடாது வாழ்க்கையென வெறுத்த காவிக்
      கோலத்தர் துறவுக்கும் அவனே காவல்;
ஓடாமல் ஏர்நின்றால் உலகம் நிற்கும்
      உலகளிக்கும் இறைவனுக்கும் பூசை நிற்கும்.

ஏர்நடக்கப் பார்நடக்கும்; இல்லை என்றால்
      எதுநடக்கும்? பசிநடக்கும் பிணிந டக்கும்
போர்நடக்கும் கொலைநடக்கும் பொய்ந்ந டக்கும்
      பொல்லாத அத்தனையும் நடக்கும் அன்றோ?
சீர்நடத்தும் பாவலன்றன் செய்யுள் எல்லாம்
      *செய்யுள்நடும் உழவனுக்குப் பின்பாட் டாகும்;
கூர்தொடுத்த ஏர்முனைக்குப் பின்னே சென்று
      கும்பிட்டுத் திரிந்தேதான் உலகம் வாழும்.

கவியரங்கம்
செய்யாறு 17.1.1969


*செய்யுள் = வயல்