புதியதொரு விதிசெய்வோம் | 127 |
சோறுபெறாக் காரணத்தால் வயிறு பற்றிச் சுடர்த்தெழுந்த பசித்தீயும் ஆள வந்தார் ஊறுபெறச் செந்தமிழை அழிக்க வேண்டி உன்னுவதால் உருத்தெழுந்த உள்ளத்தீயும் மாறுபடும் ஆட்சியினால் அல்ல லுற்ற வறியவர்தம் விழித்தீயும் கொடுங்கோல் தன்னை நீறுபடச் செய்யட்டும் செங்கோ லாட்சி நிலவட்டும் பரவட்டும் அந்த முத்தீ. |